tamilnadu

அரூரில் அரசுப் பேருந்து வழித்தடம் நீட்டிப்பு

அரூர், நவ.22-  அரூரில் இருந்து இளங்குன்னிக்கு நகர பேருந்தின் வழித்தடம்  நீட்டிப்பு செய்து அதற்கான தொடக்க விழா நடைபெற்றது.   தருமபுரி மாவட்டத்தில் இருந்து ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  இளங்குன்னிக்கு  சென்று வருகின்றனர். இந் நிலையில், அரூரில் இருந்து இளங் குன்னிக்கு நேரடியாக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், இந்தப்  பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இளங் குன்னிக்கு அரசு நகர பேருந்துகளை இயக்கு மாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதே போல், கம்பைநல்லூர் அருகேயுள்ள மஞ்ச மேடு பகுதிக்கு அரசு நகர பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அரூரில் இருந்து  டி.அம்மாபேட்டை வரையிலும் இயக்கப் பட்டு வந்த அரசு நகர பேருந்தை (எண்:6) இளங்குன்னி வரையிலும், தருமபுரியில் இருந்து கே.அக்ராஹரம் வரையிலும் இயக்கப்பட்டு வந்த அரசு நகர பேருந்தை (எண்:10) மஞ்சமேடு வரையிலும் போக்கு வரத்து கழகம்  நீட்டிப்பை செய்துள்ளது. இதையடுத்து, அரூர் பேருந்து நிலை யத்தில் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட அரசு நகர பேருந்துகளை மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இவ் விழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, சட்டமன்ற உறுப்பினர்கள் வே. சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.