tamilnadu

img

திருவில்லிபுத்தூர்: குட்டையில் மூழ்கி இரண்டு மாணவிகள் பலி

திருவில்லிபுத்தூர், அக்.6-  திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது பிள்ளையார் நத்தம் இந்த கிராமத்தைச் சேர்ந்த காளி யம்மாள் மகள் முத்துலெட்சுமி (13). (பிள்ளையார் நத்தம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்துவந்தார். இதே கிராமத்தைச் சேர்ந்த பரதன் மகள் கீர்த்திகா (எ) காளி யம்மாள் (14) (பிள்ளையார் நத்தம்  அரசு மேல்நிலைப் பள்ளி யில் 9- ஆம் வகுப்பு படித்துவந்தார். பள்ளி விடுமுறை என்ப தால் சனிக்கிழமை இவர்கள் இருவரும் சனிக்கிழமை மாலை ஐந்துமணியளவில் வீட்டிலிருந்து சென்றுள்ளனர். இரவு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர்கள் பிள்ளை யார்நத்தத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பண்ணை குட்டையில் அருகில் 9.30 மணியளவில் செருப்பு கிடந்ததை வைத்து பண்ணைக்குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;