விழுப்புரம் மாவட்டம் திரு வெண்ணெய்நல்லூர் அருகே கர்ப்பிணிப்பெண், மாற்றுத்திற னாளி முதியவர் கதறக், கதற தடுத்தும் கேட்காமல் ஆக்கிரமிப்பு எனக்கூறி நெடுஞ் சாலை துறையினர் நான்கு வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய கொடுமை நடைபெற்றுள்ளது. திருவெண்ணொய்நல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் சாலை யோரமாக அரசு புறம்போக்கு இடம் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சமீபத்தில் இது நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப் பட்டதாக தெரிகிறது. இந்த இடத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி நான்கு குடும்பத்தினர் வசித்து வந்துள்ள னர். ஜெ.ஆறுமுகம் (59), ராமச்சந்திரன் (84), குபேந்திரன் (62) உள்ளிட்டோர் தாங்கள் நீண்ட காலமாக குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டு கடந்த 93 ஆம் ஆண்டு மனு அளித்துள்ளனர். அதிலிருந்து தொடர்ந்து பலமுறை பட்டா கேட்டு மனு கொடுத்தும் வரு வாய்த்துறை அலுவலர்கள் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் குடியிருந்த ஓட்டு வீடு மற்றும் கரும்பு சோலை போட்ட வீடு உள்ளிட்டவற்றுக்கு நீண்டகாலமாக மின் இணைப்பு, தொலை பேசி இணைப்பு உரிய துறைகளால் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு வரியும் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகத்தால் வசூ லிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இந்த இடத்தின் பக்கத்தில் குடியிருக்கும் நெடுஞ்செழியன் என்பவர் பட்டா நிலத்துடன் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் முயற்சி செய்துள்ளார். முன்விரோத பகை காரணமாக ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும் என ஆட்சி யர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். இதன்பேரில் திருக் கோவிலூர் வட்டாட்சியர் சிவசங்கரன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறி யாளர்கள் இளஞ்செழியன், பிரபாகரன் ஆகியோர் புதனன்று(ஆக.28) ஜேசிபி இயந்திரம் மற்றும் பலத்த போலீஸ் பாது காப்புடன் வீடுகளை முழுமையாக இடித்து தரைமட்டமாக்கினர். மேலும் கலியன் என்பவரின் அரசு காங்கிரீட் வீட்டையும் ஒரு பகுதி இடித்து தள்ளினர். வீடுகளை இடித்து தள்ளுவதற்கு முன் வருவாய்த்துறையோ, நெடுஞ்சாலைத் துறையோ உரிய முன்னெச்சரிக்கை தர வில்லை. முதல் கட்ட நோட்டீஸ் அளிக்கப் பட்டு பதில் தருவதற்கு முன்பாகவே பத்து தினங்களிலேயே அதிரடி நடவடிக்கை எடுத்து பொருட்கள் அனைத்தும் உள்ளே இருக்கும் போதே இடித்து தரைமட்ட மாக்கி உள்ளனர். வீடுகளை இடிக்கும்போது மாற்றுத்திற னாளி முதியவர் குபேந்திரன் (62), கர்ப்பிணி சத்யா ஆகியோர் அதிகாரி களின் காலில் விழுந்து 5 நாள் அவகாசம் கேட்டு கதறி உள்ளனர். ஆனால் எதற்கும் மசியாத அதிகாரிகள் இரக்கமில்லாத நட வடிக்கையை எடுத்துள்ளனர். இதனால் அவ்வீட்டில் கூடியிருந்தோர் பக்கத்தில் இருக்கும் சேதமடைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் கிடைத்த பொருட்களை வாரி வைத்து டிஜிட்டல் போர்டு போட்டு மூடி வைத்துள்ளனர். இதைவிடக் கொடுமை தங்கள் வீடு இடிக்கப்படு கிறது என பயந்து அழுதுகொண்டே தன்னுடைய பாசத்துக் குரிய டெடிபேர் பொம்மையை தூக்கிக் கொண்டு ஒரு பெண்குழந்தை வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது. இந்த நடவடிக்கையை அறிந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வெண்ணெய்நல்லூர் ஒன்றியச் செயலா ளர் எஸ்.மணிகண்டன், “பொருட்கள் இருக்கும்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் ஏன் இப்படி நட வடிக்கை எடுக்கிறீர்கள்”என கேட்டதால் திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வா ளர் ஜெயலட்சுமியும், உதவி ஆய்வாளர் செல்வநாயகமும் மணிகண்டனை முரட்டுத்தனமாக தள்ளி இழுத்துச் சென்று வேனில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்து அன்று முழுவதும் காவலில் வைத்துள்ளனர். பின்னர் கட்சித் தலைவர்களின் தலை யீட்டின் பேரில் வெளியே அனுப்பியுள்ள னர். திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளரின் இச்செயலையும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் வரு வாய்த்துறையினர் ஆகியோரின் அடாத இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை வன்மையாக கண்டித்துள்ளார். சம்பவ இடத்தை சிபிஎம் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில், ஒன்றி யச் செயலாளர் எஸ்.மணிகண்டன், கே. சிவக்குமார், ஆர்.வீரன், ஏழுமலை, தங்க வேலு ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப் பட்டோருக்கு ஆறுதல் கூறினர்.