tamilnadu

img

காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த இலவசமாக வலைகள் வழங்குக விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம்,பிப்.22- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்தக் கூட்டத்தில்  விவசாயி கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை கள் பேசியதாவது:- கொடுக்கப்படும், மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்தான் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்க ளில் தீக்குளிப்பு சம்பவங்கள் நடை பெறுகிறது.  பொதுமக்கள் கொடுக் கும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே பயிர்களை காப்பாற்ற இலவசமாகவோ அல்லது மானியத்திலோ வலைகள் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை இன்னும் மேற் கொண்டு சில நாட்கள் தொடர்ந்து திறந்துவிட அங்குள்ள மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்டத்தில், தற்போது கரும்பு பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. இது பற்றி திண்டிவனம் வேளாண் அறிவி யல் துறை அதிகாரிகளிடம் முறை யிட்டும் அவர்கள் கண்டுகொள்ள வில்லை. இதை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கடந்த 2018-19ம் ஆண்டில் கரும்புகளை அரவைக்கு அனுப்பிய வகையில் விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை இன்னும் வழங்கப்படாமல் பாக்கி உள்ளது. அதை உடனே பெற்றுத்தர நட வடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித் துறை ஏரிகளில் குடிமராமத்து பணி களை விரைந்து முடிக்க வேண்டும். இதில் எந்தவித பாரபட்சமும் காட்டா மல் பணியை செய்ய வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங் களில் பல முறைகேடுகள் நடக் கிறது. குறிப்பாக விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டை களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. ஆகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டும். அதே போல் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் உடனுக்குடன் பணப்பட்டு வாடா செய்ய வேண்டும், சில சமயங்க ளில் 5 நாட்கள், ஒரு வாரம் வரை தாமதம் செய்கின்றனர். விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் சரிவர வழங்குவதில்லை. இதுபற்றி பலமுறை மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் பேசியும் உரிய பதில் இல்லை. பசுமை வீடு, அரசு தொகுப்பு வீடு கட்டும் திட்டத்திற்காக மணல் எடுக்கிறோம் என்ற பெயரில் மணலை கொள்ளை யடிக்கின்றனர். இது அதிகாரிகளின் துணையோடு நடக்கிறது. பய னாளிக்கு ஒரு லோடு மணலை மட்டும் கொட்டிவிட்டு 2 லோடு மணல் திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட பயனாளி களையே மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். அரசு உதவித்தொகை பெறுவ தற்கு அதிகாரிகளிடம் பணம் கொடுத் தால் மட்டுமே எந்தவொரு வேலை நடக்கிறது. குறிப்பாக முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளது .விழுப்புரம் மாவட்டத்தில் சவுக்கு உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே காகித  ஆலை அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அதற்கு தேவையான இடம் திண்டி வனம் சாரம் பகுதியில் உள்ளது. அங்கு காகித தொழிற்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  செ.புதூரில் இயங்கி வரும் கல் குவாரியில் சக்திவாய்ந்த வெடி பொருட்களை வெடிக்க செய்து பாறைகளை உடைக்கின்றனர். இதனால் அருகில் வசிக்கும் வீடு களில் அதிர்வுகள் ஏற்படுகிறது. குடி யிருக்கவே மிகவும் அச்சமாக உள்ளது. அண்மையில் இந்த குவாரியில் உயிரிழந்த தொழிலாளி யின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். இதனை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கோரிக்கை கள் அனைத்தும் பரிசீலனை செய்யப் பட்டு படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்தார். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், வேளாண் அலுவலர் சுரேஷ், கூட்டு றவு சங்க மண்டல இணைப்பதி வாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

;