உளுந்தூர்பேட்டை, ஜூன் 21- விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நடைபெற்றுள்ள பள்ளி, கல்லூரி மாணவிகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றவாளிகளை பாது காக்கும் வகையில் செயல்படும் காவல்துறையினர். மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் வெள்ளியன்று (ஜூன் 21) உளுந்தூர்பேட்டையில் நடை பெற்றது. பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போலவே கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கந்துவட்டி தொழில் செய்யும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பைனான்சியர் ராஜா, வேலுமணி இருவரும் கைது செய்யப்பட்டு இரண்டே நாட்களில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பொள்ளாச்சி சம்பவம் போலவே கல்லூரி மாணவிகளிடம் ஆசைவார்த்தை கூறி மயக்கி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ படமெடுத்து பலமுறை அந்த மாணவி களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தாகக் தெரிகிறது. கைது செய்யப்பட்ட பைனான்சியர் ராஜாவிடம் இருந்து 60க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே மாவட்டத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கிய இச்சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஒரு உயர் மட்ட விசாரணைக்கு அரசு உடனடியாக உத்தர விட வேண்டுமெனவும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கண்ணி யக்குறைவு ஏற்படாமல் ரகசிய விசாரணை நடத்த வேண்டும். அப்பெண்களுக்கும் அவர் களின் குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.