விருதுநகர், ஜூன்.14- விருதுநகரில் உள்ள பி.பி.வையாபுரித் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(44). இவர் தனியாக சேனல் நடத்தி வருகிறார். சனிக்கிழமை அதிகாலை, நடைப் பயிற்சி செய்ய லிங்க் ரோடு பகுதிக்கு சென்றுள் ளார். அப்போது, அங்கு வந்த அடையா ளம் தெரியாத நபர்கள், அவரை கொடூர மான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில், அவரது கை மற்றும் கால் எலும்பு கள் உடைந்தன. இதையடுத்து அவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித் துள்ளார். அதில் கூறியதாவது: தனியார் மெட்ரிக் பள்ளியில் தலைவ ராக இருந்துள்ளளேன். தமக்கும் பேராலி சாலையில் உள்ள முரளி, இராமமூர்த்தி ஆகியோருக்கும் இடையே பள்ளியை நிர் வாகம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது. இத னால் முன் விரோதம் உள்ளது. இருவர் மீதும் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளளேன் எனத் தெரிவித்துள்ளார். அவர்களின் தூண்டுதலின் பேரில் மூன்று பேர் தன்னைத் தாக்கியதாகவும், நேரில் பார்த்தால் அடையாளம் தெரியும் எனக் கூறியுள்ளார்.