திருச்சுழி, பிப்.6- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கள்ளான்பிரம்பு கிரா மத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி- பேதி ஏற்பட்டது. அவர்கள் ஆபத் தான நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சுழி அருகே உள்ளது கள்ளான் பிரம்பு கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்- ராணி தம்பதியரின் மகன் சரவணன் ( 2). மற்றும் விவசாயக் கூலி வேலை செய்து வரும் பஞ்ச ராஜன் -சித்ராதேவி தம்பதியரின் குழந்தைகள் வீர விக்னேஷ்வரி (3) முத்துலட்சுமி ( 2). இரு தம்பதியரும் அருகருகே வசித்து வருகின்றனர். மூன்று குழந்தைகளும் விளையாடிக் கொண்டி ருந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென, குழந்தைகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மயக்கமடைந்தன. அருகில் வசிப்பவர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் மூன்று குழந்தைகளையும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதே வாந்தி மயக்கத்திற்கு காரணம் என தெரிவித்த னர். குழந்தைகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.