இராஜபாளையம், ஜூலை 2- விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் நகராட்சியில் தற்போது கொரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இராஜபாளையத்தில் நகராட்சி மருத்துவ அலுவலர் சென்னை சென்று மீண்டும் இராஜ பாளையம் திரும்பிய அவர் திரு நெல்வேலி சென்றுவிட்டார். இத னால் மருத்துவ அலுவலர் பணி யிடம் காலியாக உள்ளது. சுகா தார ஆய்வாளர்கள் ஏழு பேர் இருக்க வேண்டும். ஒருவர் மட் டுமே பணியில் உள்ளார் சென்னை பணிக்கு சென்ற இரு ஆய்வா ளர்கள் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளனர். ஒரு ஆய்வாளர் சென்னை பணிக்கு சென்று வந்தார். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஒருவர் மட்டுமே ஒட்டுமொத்த நகராட்சி யின் உள்ள அனைத்து வார்டு களிலும் கொரனா பணிகளை கவ னிக்கும் சுகாதார ஆய்வாளராக வும், நகர்நல அலுவலராகவும் உள்ளார். இதனால் சுகாதாரப் பணிகள் பாதிக்கக் கூடிய நிலை உள்ளது. கொரோனா அதிகள வில் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நகராட்சியில் மருத்துவ அலுவலர், சுகா தார ஆய்வாளர்கள் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜ பாளையம் நகர் செயலாளர் மாரி யப்பன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார்.