விழுப்புரம், ஜூலை 12- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்கா சு. பில்ராம்பட்டு கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்று பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அரசு அனுமதி வழங்கியது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியை விநாய கர் கோவில் தெருவில் பழைய பொதுக் கிணறு அருகில் அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப் போவ தாக அறிவிக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாம்ராஜ் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிர் வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை பொது கிணறு அருகில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. கூட்டத்தில் பொறியாளர் அன்பழகன், பணி மேற்பார்வையாளர் சுதந்திரதாஸ், கிராம உதவியாளர் டி.சக்திவேல், ஊராட்சி எழுத்தர் ஆரோக்கியதாஸ் சி.பி.எம். வட்டக் குழு உறுப்பினர் கே.தீனபந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.