tamilnadu

img

விபத்தை தடுக்க மருத்துவ கல்லூரி எதிரே மேம்பாலம் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம், மார்ச் 1- விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் நெடுஞ்சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்க ளும், அதனால் உயிரிழப்பு களும் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் தொடரும் விபத்துக்களை தடுக்க  மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.30 கோடியில் மேம்பாலம் அமைக்க நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகளு டன் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை சனிக்கிழ மையன்று (பிப்.29) முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை நிறுத்திச் செல்வதற்காக அணுகு சாலையை விரி வாக்கம் செய்து பயன்படுத் தவும் அதிகாரிகள் அறிவு றுத்தினர். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ள பகுதியென அறிந்துகொண்டு மித மான வேகத்தில் செல்லும் வகையில் நெடுஞ்சாலை யில் 500 மீட்டருக்கு முன்பாகவே எச்சரிக்கை தகவல் பலகை வைக்க வேண்டும். பேருந்துகள் நிறுத்துமிடங்களை சீர மைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.