tamilnadu

சுய தொழில் தொடங்க கடன்: விழுப்புரம் ஆட்சியர் அழைப்பு

விழுப்புரம், ஜூன் 7- சுய தொழில் தொடங்க, தொழில்களை மேம்படுத்த கடன் வழங்கப்பட உள்ளதாக  ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 322 ஊராட்சி களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும்  அவர்களது குடும்பத்தினரால் நடத்தப்பட்டு  வரும் ஊரக தொழில்களை மேம்படுத்த வும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலி வுற்றோரால் நடத்தப்படும் தொழிலை மேம்ப டுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தி யாளர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் தொழில்களை மேலும் மேம்ப டுத்தவும், பிற பகுதிகளில் புலம் பெயர்ந்து  மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்க ளுக்கு புதிதாக தொழில் தொடங்கவும் அரசு வழிவகை செய்துள்ளது.

இதற்காக ரூ. 300 கோடியில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் அரசால்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 20 கோடியே 98 லட்சம்  மதிப்பில் 5,463 பேர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2,576 பேருக்கு, நபர் ஒரு வருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் என்ற  அடிப்படையில் மொத்தம் ரூ.12 கோடியே 88 லட்சம், நீண்ட கால தனிநபர் தொழில் கட னாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும். 129 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 12,900 பேர் பயன்பெறும் வகையில் ஒருமுறை  மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் வழங்கப்படும். மேலும் குழு ஒன்றுக்கு 5 பேர் அடங்கிய 12  தொழில் குழுக்களுக்கு (ஆடை தயாரிப்பு,  பால் பொருட்கள் உற்பத்தி, கலைப்பொருட் கள் உற்பத்தி போன்றவை) தலா ரூ.1  லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.18 லட்சம் ஒரு முறை மூலதன மானியமாக வழங்கப்படும்.

புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்றவர்களில் வேலை யில்லாத இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்  மூலம் தலா ரூ.1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம்  ரூ.1 கோடியே 67 லட்சம், நீண்ட கால கடனாக  வழங்கப்படும். அதேபோல் உழவர் உற்பத்தியாளர் நிறு வனத்திற்கு 1,000 பயனாளிகள் பயன்பெறும்  வகையில் ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்  பிற்கு தலா ரூ.10 லட்சம் என 3 உற்பத்தி யாளர் கூட்டமைப்பிற்கு ரூ.30 லட்சம் மூல தனம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்டோரின் தொழில் மேம்பாட்டிற்காக பயனாளிகளை தேர்ந்தெடுத்து தொழில் மூல தன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்  மூலம் தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் என்ற அடிப்படையில் நிதி  வழங்குவதற்காக மொத்தம் ரூ.4 கோடியே 1  லட்சம், நீண்ட கால கடனாக வழங்கப்படும்.

மேற்கண்ட பயன்களை பெற விரும்பு வோர் விக்கிரவாண்டி, கோலியனூர், முகை யூர், காணை, திருவெண்ணெய்நல்லூர், வல்லம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் விழுப்புரம்  சுதாகர் நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

;