சென்னை, ஆக.21- அரசு விழாக்கள், ஆய்வுக்கூட்டங்களுக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்களை அழைக்க வேண்டும் என அதிமுக அரசுக்கு திமுக தலைவர் முகஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் நடந்த அரசு விழாவிற்கு அந்த தொகுதியின் திமுக மக்களவை உறுப்பினர் செந்திலை அழைக்க வில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டா லின், மக்களின் பாதிப்பு களை மக்கள் பிரதிநிதிகளி டம் கேட்காமல், முதல மைச்சர் யாரிடம் கேட்க மாவட்டங்களுக்கு போகி றார் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக எம்பி, எம்எல்ஏக் களை வேண்டுமென்றே புறக்கணித்து வரும் அதிமுக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக பிரதிநிதிகளை அழைத்து மக்கள் குறைகளை எடுத்து ரைக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை முதல்வர் அதி முக அமைச்சர்கள் கைவிட வேண்டும் என்றும் வலியு றுத்தியுள்ளார்.