tamilnadu

img

மைக் செட் ஊழியர்களுக்கு சிபிஎம் நிவாரண பொருட்கள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 6- கொரோனா ஊரடங்கை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் மைக் செட் கடைகளை நடத்தமுடியாமல் அதன் உரி மையாளர்கள் மிகவும் சிர மத்தில் உள்ளனர். அவர்களி டம் பணிபுரியக்கூடிய ஊழி யர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சார்பில் பணியாளர்கள் 25 பேருக்குஅரிசி மற்றும் பல சரக்கு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன . நிகழ்விற்கு சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கட்சி யின் மாநில குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், நிவாரண பொருட்களை வழங்கினார். கட்சியின் மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி, ஒன்றியச் செயலாளர் சசி குமார், பிச்சைக்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.