tamilnadu

img

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து-ஒருவர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு பண்டலில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் ஆலையின் ஒரு அறை இடிந்து விழுந்தது.

ஆலையின் மற்ற பகுதிகளில் இருந்த பட்டாசுகளுக்கும் தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமானது.  எனினும் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் உள்ளே சிக்கி உள்ளனர்.இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 

;