tamilnadu

img

விளைந்த நெல்லை சாலையோரம் கொட்டி வைக்கும் விவசாயிகள் கொள்முதல் நிலையம் இல்லாமல் தவிப்பு

இராஜபாளையம், ஜூன் 7- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி களில் நிகழாண்டு நல்ல மழை பெய்தது. இராஜபாளையத்தில் கொண்ட நேரி கண்மாய், கடம்பன் குளம் கண்மாய் , பெரிய குளம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நெற்பயிர்கள் அதிகமாக பயிரிடப் பட்டிருந்தது.  தற்போது சுமார் ஐந்தாயிரம் ஏக்கரில் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மற்றொருபுறத்தில் அரசு திறந்த கொள்முதல் நிலையங்களும் சில நாட்களிலேயே மூடப்பட்டுவிட்டது. விளை வித்த நெல்லை வீடுகளில் வைக்க முடியாத விவசாயிகள் அதை இராஜபாளையம் தென்காசி சாலையோரத்தில் கொட்டி தார்பாயால் மூடி வைத்துள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவ சாயி ஒருவர் கூறுகையில், இராஜபாளை யம், பெரிய மாரியம்மன் கோவில் பகுதி யில் இயங்கி வந்த நெல் சேமிப்புக் கிடங்கு மூடப்பட்டுவிட்டது.

வேறு இடத்தில் சேமிப்பு கிடங்கை மாவட்ட நிர்வாகம் திறக்க ஏற்பாடு செய்திருந்தால் நெல்லை சாலையோரத்தில் கொட்டும் நிலை ஏற்பட்டிருக்காது. நாள் தோறும் இரவு, பகல் நேரங்களில் நெல்லை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள் என்றார்.  மற்றொரு விவசாயி கூறுகையில், கடந்தாண்டு ஒரு ஏக்கருக்கு ரூ.27 ஆயிரம் வரை செலவு செய்து நெல் பயிரிட்டோம். இந்தாண்டு ரூ.28 ஆயிரம் முதல் ரூ.30 ஆயி ரம் வரை செலவு செய்துள்ளோம். பருவ மழை நன்கு பெய்த காரணத்தால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இங்கு அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால் தனி யார் வியாபாரிகள் நெல்லை, அடிமாட்டு விலைக்குக் கேட்கின்றனர். நஷ்டத்திற்கு விற்க மனமில்லை. எனவே, நெல்லை சாலை யோரங்களில் கொட்டி பாதுகாத்து வரு கிறோம் என்றார். தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி, இராஜபாளையம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயி களைப் பாதுகாக்க வேண்டும். நமது நிருபர்