விருதுநகர், மே 16- கொரோனா வைரஸ் தொற்று பரிசோத னையை விருதுநகர் மாவட்டத்தில் அதி கரிக்க வேண்டும். அதற்கான கூடுதல் கருவி கள் அரசுத் வாங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் சனிக் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:- விருதுநகர் மாவட்டத்தில் கொரோன தொற்றால் பாதிக்கப்படோரின் எண் ணிக்கை 51 ஆக உள்ளது. வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்ங்களில் இருந்து விருது நகர் மாவட்டத்திற்கு வருவோர் கண்கா ணிக்கப்பட்டு தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக் கப்படுகின்றனர்.
வைரஸ் தொற்று கண்ட றியப்பட்டுள்ள பகுதிகள் அடைக்கப்பட் டுள்ளன. அப்பகுதியில் உள்ள பொதுமக்களி டமும் பரிசோதனை செய்ய வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் நாளொன் றுக்கு 200 பேரிடம் மட்டுமே மாதிரிகள் எடுக் கப்பட்டு பரிசேதனைக்காக அனுப்பி வைக் கப்படுகிறது. விருதுநகர் அரசுத் தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதிப்பை விரைந்து கண்டறியும் கருவி மூலம் நாளொன்றுக்கு 76 பேருக்கே பரி சோதனை மட்டுமே செய்ய முடியும். இத னால் தேனி மருத்துவக் கல்லூரி, திரு நெல்வேலியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் வெளியாக நான்கு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை தாமதம் ஆகிறது.
இதனால், மாதிரி எடுக்கப்பட்டவர்கள், முடிவுகள் என்றைக்கு வரும். எவ்வாறு வரும்? என்ற அச்ச உணர்வு டனேயே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. பரி சோதனைக் கருவிகளை விருதுநகர் அரசுத் தலைமை மருத்துவமனையில் கூடுதலாக்க வேண்டும். விரைவில் பரிசோதனை முடிவு கள் வெளியாவதை உறுதிப்படுத்த வேண்டும்.