உளுந்தூர்பேட்டை, மே 29-தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை உயர்த்தும் அரசுப் பள்ளிகளை மூட முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்தும், கூடுதல் நிதி ஒதுக்கி அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சென்னையில் துவங்கிய சைக்கிள் பிரச்சார பயணக்குழு உளுந்தூர்பேட்டை நகரை வந்தடைந்தது.சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் வந்த குழுவை இந்திய மாணவர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டக் குழு சார்பில் பட்டாசுகள் வெடித் தும், மலர்கள் தூவியும், எழுச்சி கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர். பின்னர் நகர் முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று விருத்தாச்சலம் சாலை சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மாரியப்பன், துணைச்செயலாளர் சந்துரு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் ர`ஹீம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் எம்.செந்தில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகி சுதா, எல்ஐசி சங்கத்தின் நிர்வாகி கே.வேலாயுதம், மாணவர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் ரிச்சர்ட்பிரபு, செயலாளர் கே.வி.ஸ்ரீபத் உள்ளிட்டோர் பயண குழுவினரை வாழ்த்திப் பேசினர். மாணவர்களே தயாரித்து இயற்றப்பட்ட நாடகம், கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதர அமைப்புகளின் சார்பில் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.புதனன்று காலையில் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கண் திறக்க அரசு பள்ளிகளை உருவாக்கிய காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் திருச்சி நோக்கி புறப்பட்ட சைக்கிள் பிரச்சார பயணத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை கொடியசைத்து துவக்கி வைத்தார். கடலூர் மாவட்ட எல்லையான வேப்பூர் கூட்டுச் சாலையில் பயணக் குழுவினரை கடலூர் மாவட்டக்குழு சார்பில் வரவேற்று அழைத்துச் சென்றனர்.கடலூர்விழுப்புரம் தெற்கு மாவட்டத்தை தொடர்ந்த இந்த மிதிவண்டி பிரச்சார பயணக் குழு கடலூர் மாவட்டத்திற்கு சென்றது. அந்த மாவட்ட எல்லையான வேப்பூரில் இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.