விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் முழுவதும் நடைபெற்று வரும் பணிகளில் முறைகேடு, ஊழல் நடைபெறுவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வட்ட குழு உறுப்பினர் எஸ்.பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.அர்ச்சுணன், எம்.கே.முருகன் ஆகியோர் பேசினர்.