விழுப்புரம், ஜூலை 22- விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத் திற்கு உட்பட்ட டி.பரங்கினி கிராமத்தில் வசிப்பவர் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முணியாண்டி. இவரது மகள் மு.தன லட்சுமி. 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற் றுள்ளார். இவர் 8 ஆம்வகுப்பு வரை தி.பரங்கினி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து பின்பு அவரது கிராமத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள புதுக்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்தார், கடந்த 2018ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 438 மதிப்பெண் பெற்று அந்த பள்ளியிலேயே முதலிடம் பெற்றார். 11ஆம் வகுப்பு தேர்விலும் 388 மதிப்பெண் பெற்றார். 12ஆம் வகுப்பு தேர்வில் 354 மதிப் பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அவரது தந்தை முனியாண்டி கடந்த 2010ஆம் ஆண்டு சாதிச் சான்றிதழ் கேட்டு விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியரிடம், தான் இருளர் என்பதற்கு ஆதாரமாக 14 ஆதா ரங்களுடன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
தற்போது அந்த மாணவி 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், சாதிச் சான்றி தழ் இல்லாததால் மேல் படிப்பு செல்ல முடி யாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் தனக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், எம்எல்ஏ, கோட்டாட்சியர் உள் ளிட்டோருக்கு மனு அளித்துள்ளார். இந்த சமூகத்தில் ஆண்கள் படிப்பதே கடினம் என்ற நிலையில் இருளர் சமூகத்தில் இருந்து ஒரு பெண் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆண்டுதோறும் சாதி சான்றிதழ் இல்லாமல் இருளர் இன மாண வர்கள்கள் மேல படிப்பு படிக்க முடியாமல் செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த மாணவிக்கு உடனடியாக சாதிச் சான்றி தழ் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.