tamilnadu

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன

விழுப்புரம்.ஜன.2- விழுப்புரத்தில் தேசிய குழந்தை பாது காப்பு ஆணைய உறுப்பினர் ஜி.ஆனந்த்  தலைமையில், குழந்தைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்நாடு முழு வதும்  கடந்த ஓராண்டில்  பெண்களுக்கு  எதிரான குற்றங்கள்  நிறையவே குறைந்துள் ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் அச்சப்படும் அளவுக்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்  டும். இதுதொடர்பாக கடந்த மூன்று மாதங்க ளில் 14 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அதில் 4 ஆயிரத்து 500 புகார்களுக்கு தீர்வு  காணப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தை கள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழகம்  சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார், கூட்டத்தில் விழிப்புணர்வு கலெண்டர் வழங்கி னார்.

;