tamilnadu

img

இருளர் பழங்குடி மாணவிக்கு சாதி சான்றிதழ் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

விழுப்புரம், ஆக. 6- விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்  திற்கு உட்பட்டது டி.பரங்கினி கிராமம். இந்த  கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முனியாண்டி மகள் தன லட்சுமி 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி  பெற்றுள்ளார். இவர் சாதி சான்றிதழ் இல்லாத தால் மேல்படிப்புக்கு செல்ல முடியவில்லை. சாதிச்சான்று கேட்டு முனியாண்டி  வரு வாய்க் கோட்டாட்சியரிடம் தாங்கள் இருளர்  இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதற்கு ஆதாரமாக 14 ஆதாரங்களுடன் விண்ணப்பித்  தார். ஆனால் இதுவரை சான்றிதழ் வழங்க படவில்லை.  இந்நிலையில் வியாழக்கிழமை மாணவி  தனலட்சுமி, அவரது பெற்றோர், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துகுமரன் ஆகியோர்  வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ  ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்து, பாதிக்கப்பட்ட இருளர் மாணவிக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதில் உள்ள தாமதம் குறித்து கேட்டனர்.

அப்போது ராஜேந்திரன் தங்கள் விசா ரணை முடிந்து விட்டதாகவும், விசாரணை  அறிக்கையை சென்னை பல்கலைக்கழ கத்தில் உள்ள மானுடவியல் துறைக்கு அனுப்பி விட்டோம்.  அவர்கள் வந்து நேரடி  விசாரணை நடத்தி, அவர்கள் இருளர் பழங்குடிதான் என கூறிய பின்பே சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்தார். இதுகுறித்து மாவட்டச் செயலாளர் என்.சுப்பரமணியன் கூறுகையில், மாவட்டத்தில் இருளர் பழங்குடி மக்கள் சாதி சான்றிதழ் இல்லாமல் பல்வேறு அரசு மற்றும் தனியார் நலத் திட்டங்களை பெறமுடியாமல் உள்ள னர். அவர்கள் தொடர்ந்து சாதி சான்றிதழ் கேட்டு சம்மந்தப்பட்ட துறையில் விண்ணப் பம் அளித்தும், விசாரணை என்ற பெயரில்  பல ஆண்டுகள் இழுத்தடிப்பதும் தொடர்  கதையாக உள்ளது.

இதனால் ஆண்டு தோறும் இருளர் பழங்குடி சமூகத்தில் சாதி  சான்றிதழ் கேட்போர் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்ற னர். இதனால் இருளர் இன மாணவர்கள் மேல் படிப்புக்குச் செல்ல முடியாமல் செங்கல்  சூளை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைக்கு செல்கின்றனர்.  எனவே விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக விசாரணை நடத்தி சாதிச்  சான்றிதழ் வழங்க வேண்டும். இல்லையென் றால் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்து வோம் என்றார்.