திருவில்லிபுத்தூர், ஜூன் 28- கொரோனா தொற்றால் உலகமே விழிபிதுங்கி நிற்கிறது. குறிப்பாக தமி ழகம் இந்தியாவில் மூன்றாவது இடத் தில் உள்ளது. தமிழத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு தவிர்த்து மதுரையும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜீயர் வசிக்கும் விருதுநகர் மாவட்டத்தில் 313 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். இந்த மாவட்டத்தின் சிறப்பு அதிகாரியான மதுமதி விருதுநகர் தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றை கண்டறியும் இயந்திரம் ஒன்று தான் உள்ளது. ஒரு டெக்னீஷியன்தான் உள்ளார். புதிய இயந்திரம் வாங்கப்படும் என விஞ்ஞானப்பூர்வமாக பிரச்சனை களை கையாண்டுவருகிறார். இதற்கிடையில் திருவில்லிபுத் தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், “108 முறை ஓம் நமோ நாராயநாய மந்திரத்தை வீட்டிலிருந்தபடியே ஜெபம் செய்தால் மருந்து மாத்திரை கள் தேவையில்லை கொரோனா தானாக ஓடிவிடும் என கூறியிருக்கிறார். சிரிப் பதா? அழுதவா எனத் தெரியவில்லை. அத்தோடு அவர் நிற்கவில்லை. கொரோனாவை ஒட்டி இரண்டு மாதங்களுக்கு மேலாக கோவில்கள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளன. கோவில்களை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில் கள் திறக்கப்பட்டால் கொரேனா ஓடி விடும். தமிழக அரசு திருவில்லி புத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்து கோவில் களையும் திறக்க வேண்டும். ஆண் டால் கோயிலில் வழிபட இ-பாஸ் கொடுக்க வேண்டுமென்றார்.