விழுப்புரம், ஜூலை 8- நாடுமுழுவதும் கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறது, இந்நிலை யில் கடந்த மார்ச் முதல் ஏப் ரல் மாதம் வரை தொற்று குறைவாக இருந்த விழுப்பு ரம் மாவட்டத்திற்கு சென்னை கோயம்மேடு மார்க்கெட் சென்று வந்த வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது, மாவட்டத் தில் தொற்று பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை வரை 1,233ஆக உள்ளது. இவர்களில், 487 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். 406 பேர், வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ள னர். 233 பேர் தனிமைபடுத்தும் மையங்களில் உள்ளனர். இதுவரை 728 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ள னர். 18 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் விழுப்பு ரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது. திண்டிவனம் நகரில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் சென்னையில் இருந்து வந்த வர்கள் என தெரிய வந்துள் ளது. இதனால், சென்னை யில் இருந்து, திண்டிவனம் நகருக்கு வரும் நபர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உட்பட நான்கு மாவட்டங்க ளைப் போன்று, விழுப்புரம் மாவட்டத்திலும் முழு பொது முடக்கம் அமல்படுத்துவது குறித்து அரசு தரப்பில் ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் கடைகள் செயல் படும் நேரத்தை குறைப்பது குறித்தும், ஒரே தெருவில் மூன்று குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற் படும் பட்சத்தில், அந்த பகுதியை தடைசெய்வது குறித்தும் பரீசிலிக்கப்படு கிறது. விழுப்புரம் நகரத்தில் காமராஜர் வீதி புதன்கிழமை முதல் முடக்கப்படது. இது போன்ற முடக்கங்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.