tamilnadu

போக்சோ சட்டத்தில் இருந்து தப்பிக்க விஷம் அருந்தியவர் கைது

சாத்தூர், ஜூன் 6- சிறுமியை ஏமாற்றிக் கடத்திச் சென்ற வாலிபர், போலீசாரிடமிருந்து தப்பிக்க விஷம் குடித்ததாக நாடகம் ஆடியது பரிசோதனையில் தெரிய வந்தது.  மதுரை மாவட்டம் டி. குன்னத்தூர் அருகே  உள்ள கே.பெருமாள்பட்டியை சேர்ந்த சின்னகாளை மகன் ஐயர்(23). இவர் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி யிடம் ஒரு வருடமாக செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். இந்தநிலையில் சிலதினங்களுக்கு முன்பு அம்மாணவியை அவர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது.  இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் காரைக்கால் அருகே சென்ற ஐயர் மற்றும் மாணவியை   போலீசார் மடக்கிப் பிடித்தனர்.  பின்பு,  போலீசார் போக்சோ  சட்டத்  தில் நடவடிக்கை எடுப்பது ஐயருக்கு  தெரியவந்தது.  எனவே, அந்த வழக்கி லிருந்து தப்பிக்க   தான், பூச்சி மருந்தை குடித்ததாக போலீசாரிடம் தெரி வித்துள்ளார்.  இதையடுத்து, மருத்து வர் மூலம் போலீசார் ஐயரை பரிசோதனை செய்தனர். இதில் விஷம் அருந்தியது போல அவர் நாடகம் ஆடி யது தெரிவந்தது. பின்னர்,  போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குபதிவு செய்து ஐயரை  போலீசார் கைது செய்தனர்.

;