விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடந்த 15 நாட்களாக இயங்காததால் விசாயிகள் கடும் அவதியுற்று வந்தனர். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வே. உதயகுமார், வேல்மாறன். சு பழனி ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் க . பொன்முடி, நகரச் செயலாளர் அ.சா. ஏழுமலை உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விவசாயிகள் விற்பனை செய்த விளைப் பொருள்குரிய பாக்கித் தொகையை வியாபாரிகள் உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய ஒப்புக்கொண்டனர்.