விருதுநகர், மே 14- பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த 204 பேர் தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத் தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே 10 முதல் 14 வரை கார் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் 204 பேர் விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து சேர்ந்த னர். இவர்களை விருதுநகர் அருகே உள்ள வி.வி.வி மகளிர் கல்லூரி, கலச லிங்கம் கல்லூரி, சேது பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் மாவட்ட சுகா தாரத்துறை அதிகாரிகள் தங்க வைத்த னர். பின்பு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை. இதையடுத்து, அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறி வுறுத்தியுள்ளனர்.