tamilnadu

img

வாட்ஸ் அப்பிற்கு வரி விதித்ததால் லெபனான் மக்கள் போராட்டம்

வாட்ஸ் அப்பிற்கு வரி விதித்ததால் லெபனான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 
உலகம் முழுவதும் மொபைல் பயன்பாட்டாளர்கள் அதிக அளவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்களும் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் லெபனான் நாட்டில் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் பேஸ் டைம் ஆகிய வீடியோ சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.14 அளவில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை காவல் துறையினர் ஒடுக்க முயன்றதால் மோதல் உருவானது. 
மக்களின் தொடர்போராட்டத்தை தொடர்ந்து சேவை வரி திட்டத்தை அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.