புவனேஸ்வரம், ஜூன் 8- ஒடிசாவில் தெங்கனல் மாவட் டத்தில் கங்கடஹாத் பகுதியில் பிர சால் பயிற்சி தளத்தில் பயிற்சி விமானம் திங்களன்று விபத்துக் குள்ளானதில் பீகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சீப் குமார் ஜா, தமி ழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா ஆகியோர் படு காயமடைந்து அருகிலுள்ள காமக்கியாநகர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட னர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரி ழந்துவிட்டனர் என்பதை உறுதிப் படுத்தினர். இதையடுத்து அவர் களது உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற் கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது.