சேலத்தில் பிரகாஷ்காரத் திறந்து வைத்தார்
சேலம், அக் 20 - மனித குலத்தின் விடியல் மாமேதை கார்ல் மார்க்சின் வெண்கலச் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறை தியாகிகள் நினை வரங்க வளாகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழா நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எழுச்சியோடு கொண் டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாமேதை காரல் மார்க்ஸ் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் சேலத்தில் அக்டோபர் 21 திங்களன்று நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயலாளர் பி. இராம மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி வரவேற்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று எழுச்சி மிகு முழக்கங்களுக்கிடையே மார்க்ஸ் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார். மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. தங்கவேல், ப. செல்வசிங், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா, தர்மபுரி மாவட்ட செயலாளர் ஏ. குமார், ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எஸ். ஆர் .ஜெயராமன், நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ். கந்த சாமி ஆகியோர் உரையாற்றினார்கள். சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. உதயகுமார் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, காஞ்சிபுரம் புது வினை தப்பாட்டம் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.