சென்னை, ஜுன் 3-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர்விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்துத் தெரிவிக்கத்தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத் தில் 2 வார அவகாசம் கோரியுள்ளது.எழுவரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சர வையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் ஆளுநர் பரிசீலனையில், இருந்து வரும் நிலையில் எழுவரை விடுதலை செய்யக் கோரிக்கை வலுத்து வருகிறது.இந்நிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012ல் தொடர்ந்த வழக்கு திங்களன்று (ஜூன் 3) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது,தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், எழுவர் விடுதலை தொடர்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானம்ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதன் தற்போதைய நிலை குறித்துத் தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.மேலும் எழுவரை விடுதலை செய்யக் கோரி தமிழக உள்துறை செயலாளரிடம் கொடுத்த மனுவைப் பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யத் தமிழக அரசு அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் அமர்வு, 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.