சென்னை, ஜூன் 28 - பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கை யில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட் டோம். அது தொடர்பாக பேரவைத் தலைவ ரிடம் கடிதம் கொடுத்துவிட்டோம். அன் றைக்கு இருந்த சூழ்நிலையில் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பொழுது அந்த நிலை தேவையில்லை என்று தலைமைச் செயலகத்தில் செய்தி யாளர்களிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள் விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், 8 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் குடிநீர் பிரச்ச னைக்கு எந்த முக்கியத்துவமும் தர வில்லை. எனவேதான் தமிழகம் முழுவதும் கடுமையான பஞ்சம் நிலவுகிறது. குறிப்பாக சென்னையில் காலிக் குடங்களுடன் தாய் மார்கள் அலையக்கூடிய நிலை உள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது அறிவித்த கடல் நீரை குடிநீராக் கும் ஒரு திட்டத்திற்கு இப்போது தான் அடிக் கல் நாட்டு விழா நடத்தியிருக்கிறார்கள். அது எப்பொழுது முடிவடையும், எப்பொழுது தண்ணீர் கிடைக்கும் என்பது ஒரு கேள்விக் குறிதான் என்றும் அவர் தெரிவித்தார்.