10,000 குழுக்கள் வீடுவீடாக சென்று பிரச்சாரம்
சென்னை, ஆக. 20 - வருமான வரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 12 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க கோரி வியாழனன்று (ஆக.20) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கியது. 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றன. கொரோனா தொற்று பர வலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் மக்கள் வாழ்வாதா ரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, வருமான வரி வரம்பிற்குள் வராத குடும்பங்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாய், மாநில அரசு 5000 ரூபாய் என மாதம் 12 ஆயிரத்து 500 ரூபாயை ஊரடங்கு கால நிவாரணமாக மாதந்தோறும் வழங்க வேண்டும்,
மத்திய அரசு, உணவு கிடங்கில் உள்ள 10 லட்சம் டன் உணவு தானி யத்தை நியாய விலைக் கடைகள் வாயிலாக 6 மாதங்களுக்கு இலவச மாக மக்களுக்கு வழங்க வேண்டும், பொதுத்துறைகளை தனியார்மய மாக்கும் நடவடிக்கைகள், தொழிலாளர் நலச்சட்டங்களை சிதைப்பது, வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது போன்றவற்றை கைவிட வேண்டும், மாநில அரசுகளுக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும், இ-பாஸ் முறையை முழுமை யாக ரத்து செய்ய வேண்டும், கேரள அரசை போன்று மின்கட்டணத்தில் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்தில் நடைபெறும் ஊழலை தடுக் க வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், ஆணவப் படு கொலைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.20ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை மக்கள் இயக்கம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 10 ஆயிரம் குழுக்கள் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்கின்றன. ஆக. 25 - 26 தேதி களில் மாபெரும் மக்கள் போராட்ட த்தையும் நடத்த உள்ளன. இதனையொட்டி சென்னை வேளச்சேரி தொகுதியில், பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி தலை மையில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.