tamilnadu

img

கூடுதலான மின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்

தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் இயக்கம்

அன்னூர், ஜூலை 14- கூடுதலான மின் கட்ட ணத்தை தமிழக அரசே ஏற்க  வேண்டும் என வலியுறுத்தி  அன்னூரில் மார்க்சிஸ்ட் கட்சி யினர் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத் தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் கார ணமாக நாடு முழுவதும்  144 தடை உத்தரவு  அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில், தொழி லாளிகள், வணிகர்கள் உட்பட அனைத்து  தரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கிக்  கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இச் சூழலில், மக்களை மேலும் இன்னலுக்கு உள் ளாக்கும் வகையில் தமிழக அரசு மின்கட்டணத்தை கூடுதலாக வசூலித்து வருகிறது. இதைக்கண்டித்தும், கூடுதலான மின்கட்டண தொகையை தமிழக அரசு ஏற்க  வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி  அன்னூர் ஒன்றியம் சார்பில் பொதுமக்களி டம் பெறப்பட்ட 200க்கும் மேற்பட்ட மனுக் களை தமிழக முதல்வருக்கு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் ஏ.முகம்மது முசிர், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.மணிகண்டன், சத்தியராஜ், சிடிசி ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.