வரவேற்புக்குழு நிறைவு கூட்டத்தில் டாக்டர் கே.ஹேமலதா பேச்சு
சென்னை, பிப். 24- வர்க்கப் போராட்டமே சுரண்டலை ஒழிக்கும் என்று சிஐ டியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா கூறி னார். சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு ஜன.23-27 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தன்னலமற்று உழைத்த ஊழியர்களுக்கு பாராட்டு விழா ஞாயிறன்று (பிப்.24) சென்னையில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் தில்லியில் உள்ள பி.ராமமூர்த்தி தொழிற் சங்க பயிற்சி பள்ளி மற்றும் ஆய்வு மைய நிதியாக சிஐடியு மாநிலக்குழு சார்பில் 37 லட்சம் ரூபாயை தலைவர்கள் வழங்கி னர். அதனைப் பெற்றுக் கொண்டு கே.ஹேமலதா பேசியதன் சுருக்கம் வருமாறு: இந்தியாவில் நிரந்தரமற்ற, தற்காலிக, நிச்சயமற்ற தொழி லாளர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. இதனை மாற்ற தொழிற்சங்கங்களிடையே விரிந்து, பரந்த ஒற்றுமையை உருவாக்குவோம். அரசின் கொள்கைக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்களை தீவிரப்படுத்தி அரசின் கொள்கைகளை தடுத்து நிறுத்துவோம். தொழி லாளர் சட்டங்களே இல்லாத காலத்தில்தான் தொழிலாளி வர்க்கம் போராடி, உயிரை, உட மையை இழந்து தொழிலாளர் நலச்சட்டங்களை கொண்டு வந்தது. அரசாங்கம் தானாக எதையும் கொண்டு வர வில்லை. இந்திய அரசு பொதுத்துறை கள், கேந்திரமான தொழில்கள், இயற்கைவளங்கள் அனைத்தை யும் தனியார்மயமாக்கி வரு கிறது. அதற்கேற்ப தொழிலா ளர் நலச்சட்டங்களை தகர்த்து வருகிறது. தொழிலாளர் சட்டங் களை 4 தொகுப்புகளாக பிரித்து, அதில் சம்பளத் தொகுப்பு சட் டத்தை மத்திய அரசு நிறை வேற்றிவிட்டது. மீதமுள்ள 3 சட்டத் தொகுப்புகளையும் நிறை வேற்ற முயற்சித்து வருகிறது. இதற்கெதிரான போராட்டத் தோடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பிற்கு எதிராக ஒத்துழையாமை இயக் கத்தை நடத்துவோம்.
நவீன தாராளமயத்திற்கு எதி ரான போராட்டம் உலகம் முழுவ தும் நடந்து வருகிறது. தற்போது நிலவும் பொருளாதார நெருக் கடியை முதலாளித்துவத்தால் தீர்க்க முடியவில்லை. எனவே, லாபத்தை அதிகரிக்க கார்ப்ப ரேட்களுக்கு ஆதரவாக முதலா ளித்துவ அரசுகள் செயல்படு கின்றன. வர்க்கப்போராட்டத்தின் மூலமே சுரண்டலற்ற சமுதா யத்தை அமைக்க முடியும். அர சின் கொள்கைகளை அம்பலப் படுத்துவோம். வர்க்க அரசி யலை போதிப்போம். அகில இந்திய மாநாட்டின் முடிவுகளை தொழிலாளி வர்க்கம் உணர்வுப் பூர்வமாக அமலாக்கும் வகை யில் செயலாற்றுவோம். சமூக சுரண்டலுக்கு முடிவுகட்ட போராட்டங்களை தீவிரப்படுத்து வோம், அரசின் கொள்கைகளை மாற்றுவோம் என்ற மாநாட்டின் முழக்கத்தோடு முன்னேறு வோம். இவ்வாறு அவர் பேசினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இந்திய துணைத் தலை வர் ஏ.கே.பத்மநாபன், மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகு மாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.