tamilnadu

img

மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அரசு பள்ளிகளை மூடாமல் பாதுகாத்த ஆசிரியர்கள்

சென்னை, ஆக.26- சென்னை புரசைவாக்கம் தாணா தெரு வில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, பள்ளி மூடலைத் தடுத்த தலைமை ஆசிரியர் என்.விஜயதாரணி மற்றும் ஆசிரியர்களையும், அதேபோல் எழும்பூர் வரதராஜபுரத்தில் உள்ள சென்னை உருது பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஏ.ஜபின் மற்றும் ஆசிரியர்களையும் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பாராட்டினார்.  கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன், எழும்பூர் பகுதி செயலாளர் முருகன், கிருஷ்ணமூர்த்தி, ராஜ மணி, அறக்கட்டளை நிர்வாகி ஜாகிர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு வெளியிட்டிருக்கக் கூடிய புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அரசுப் பள்ளிக்கூடங்களில் 20க்கும் குறைவான மாண வர்கள் இருந்தால் அந்த பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறுகிறது. அதனடிப்படையில் நாடு முழுவதும் லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூடக்கூடிய அபாயம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 200 பள்ளிகளை மூடி விட்டதாக தகவல்கள் வருகின்றன. இதைவிட எண்ணிக்கை கூடுதலாக இருக்கக் கூடும். சில பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூட வேண்டும் என்று அரசு முடிவெடுத்து அந்த பட்டியலை வெளியிட முடியாமல் தயக்கத்தில் உள்ளனர்.  கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளை மூடி விட்டு நூலகமாக மாற்றுவதால் எந்த பயனும் கிடையாது. திருவண்ணாமலை, வேலூர், சிவ கங்கை மாவட்டங்களில் சில அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்கள் திறப்பதற்கு அரசு முயற்சிக்கும் போது, ஆசிரியர்களும், பொது மக்களும் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கி றார்கள். மத்திய அரசின் கல்விக் கொள்கை, மாநில அரசின் கல்விக் கொள்கை என்ன கூறுகிற தென்றால், கட்டாய தரமான இலவசக் கல்வி அளிப்பதுதான் அரசின் கொள்கை என அறி வித்திருக்கிறார்கள். ஏற்கனவே 6 வயது முதல் 14 வயது வரை குழந்தைகளுக்கு கட்டாய இல வசக் கல்வி என்பது அரசினுடைய கொள்கை. ஆனால் புதிய கல்விக் கொள்கையில் 3 வயது முதல் 18 வயது வரை கட்டாய தரமான இலவசக் கல்வி என்கிறார்கள். 

அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு எப்படி இலவசக் கல்வி வழங்க முடியும்?

புரசைவாக்கம் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 99.5 சதவிகிதம் தலித் சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள். தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளே. எனவே அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது. மூடினால் ஏழைக் குழந்தை களின் கல்வி கேள்விக்குறியாகி விடும்.

48 மாணவர்கள் 281 ஆன கதை

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அரசுப் பள்ளிகளை மூடவேண்டும் என அரசு முடிவெடுத்திருக்கும் சூழலில் தமி ழகத்தில் பல மாவட்டங்களில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் முயற்சி யினால் மாணவர்களின் எண்ணிக்கையை அதி கரித்துள்ளனர்.  புரசைவாக்கம் தாணா தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 2013ஆம் ஆண்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 48. இந்தாண்டு மாணவர்களின் எண்ணிக்கை 281. இது எப்படி சாத்தியமானது? அங்குள்ள ஆசிரியர்கள் வீதிவீதியாகச் சென்று மாணவர்களை அரசுப் பள்ளியில் சேருங்கள் என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளனர். சில அமைப்புகளிடம் நன் கொடை பெற்று சில வசதிகளை செய்துள்ள னர். கற்பிக்கும் தரத்தையும் உயர்த்தியுள்ளனர். இதை தமிழகம் முழுவதும் அரசால் செய்ய முடியாதா?

8 பேர் 80 பேர் ஆயினர்

அதேபோல் எழும்பூரில் உள்ள உருது தொடக்கப் பள்ளி 1926ஆம் ஆண்டு துவங்கப்  பட்டது. 2010ஆம் ஆண்டு வெறும் 8 மாண வர்கள், ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்துள்ள னர். இந்த பள்ளியை நடத்த இயலாது என மாநகராட்சி முடிவெடுத்தது. ஆனால் ஆசிரி யர்கள், சில அறக்கட்டளை முயற்சியினால் 80 மாணவர்களாக உயர்ந்துள்ளது. இப்பள்ளியில் அனைத்து சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளும் பயில்கின்றனர். தற்போது இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். எல்.கே.ஜி. யுகேஜி வகுப்பு உள்ளது. ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல ஒரு அறக்கட்டளையின் சார்பில் வேன் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எப்படி இந்தப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிந்ததோ அதே போல், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணிக்கை குறையக் கூடிய பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களை இணைத்து மாணவர்களை சேர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி மாண வர்களின் எண்ணிக்கையை உயர்த்தி பள்ளி யை மூடாமல் பாதுகாக்கும் தலைமை ஆசிரி யர்களையும், ஆசிரியர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இரண்டு மாநகராட்சிப் பள்ளிகளிலும் மாண வர் எண்ணிக்கையை உயர்த்தியதற்காக சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.