தரமணி அரசு மேல்நிலை பள்ளி மாணவி புஷ்பா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 528 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றார். அவரை தரமணி தந்தை பெரியார் நகர் பொதுநலச்சங்கத்தின் தலைவர் ரபீக், செயலாளர் புஷ்பராஜ், பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஊக்கத்தொகை அளித்து பாராட்டினர்.