tamilnadu

img

மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது

சென்னை,ஆக.12- சுதந்திர தின விழாவில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15 ஆம்தேதி கொண்டாடப்பட உள்ளது.  சுதந்திர தின விழாவில் பள்ளிகளுக்கு அருகே உள்ள மாணவர்களை பங்கேற்க வைக்கும் முயற்சியில் சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஈடுபட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், ‘சுதந்திர தின விழாவில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பங்கேற்கவைக்கக் கூடாது. சுய விருப்பத்தின் அடிப்படையில் கலந்துகொள்ளும் மாணவர்களை மட்டுமே விழாவில் அனுமதிக்க வேண்டும். தற்போதைய கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, விழாவில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்பன உட்பட வழிகாட்டுதல்கள் கூறப்பட்டுள்ளன.