tamilnadu

img

தமிழகம் முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை வலியுறுத்தி மார்ச் 14-ல் கடையடைப்பு - ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா

தஞ்சாவூர், மார்ச் 10- திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்ச் 14 ஆம் தேதி கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா. தஞ்சாவூரில் இப்பேரமைப்பின் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழ மை நடைபெற்றது. இதில், பங்கேற்ற விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 

உள்ளாட்சி கடைகள் வாடகை விகிதம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு பேரூராட்சி, நகராட்சிக்கும் வேறுபடுகிறது. இதே போல, குப்பை வரி என்பது கொள்கை அடிப்படையில் இல்லாமல், யார் வேண்டு மானாலும், எந்த அலுவலராக இருந்தாலும் தான் தோன்றித்தனமாக நிர்ணயிக்கலாம் என்ற நிலை உள்ளது. உதாரணமாக தருமபுரி மாவட்டத்தில் ஒரு  கடைக்காரருக்கு ரூ. 1 லட்சம் குப்பை வரி போடப்பட்டது. அதன் பிறகு அந்த அலுவலர்களை மாவட்ட நிர்வாகி கள் சந்தித்த போது வெறும் ரூ. 3,000 என திருத்தப் பட்டது. எந்த வகையில் கொள்கை இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, தமிழகத்தில் முதல் கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்ச் 14 ஆம் தேதி கடைகளை அடைத்து, அங்கு 10,000 வணிகர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த நிலைமை தொட ருவதைத் தவிர்க்க தமிழக முதல்வரும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் வணிகர் பிரதிநிதிகளை அழைத்து தமிழகம் முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பும், வாடகை நிர்ணயமும் செய்ய வேண்டும்.

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஆயி ரத்துக்கும் அதிகமான கடைகள் காலி செய்யப் பட்டுள்ளன. இங்கு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு முதல் கட்டமாகக் கட்டப்படும் பணியில் தரைதளத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வரும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படாவிட்டால் திருவாரூரில் மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ள வணிகர் தின மாநாட்டில் மாநில அளவிலான போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். இந்த மாநாட்டில், மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன” என்றார் விக்கிரமராஜா. முன்னதாக, கூட்டத்துக்குப் பேரமைப்பின் தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் வி. கோவிந்த ராஜுலு, பொருளாளர் ஏ.எம்.சதக் அப்துல்லா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.