நாகர்கோவில், நவ.23- ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொது தேர்வை கைவிட வலியுறுத்தியும், அரசுப்பள்ளி களை பாதுகாத்திட வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர் மாநில கோரிக்கை மாநாடு நாகர்கோவிலில் நடக்க உள்ளதாக இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தெரிவித்தார். நாகர்கோவிலில் சனியன்று இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின்போது மேலும் அவர் கூறுயதாவது: தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசுப் பள்ளிகளும், 8 ஆயிரத்து 401 அரசு உதவிபெறும் பள்ளிகளும் 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப் பள்ளிகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே வாய்ப்பாக உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கள் மாணவர் சேர்க்கை இல்லாமல் தற்போது மூடு விழா நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3500 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசு பள்ளி களை மூடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஒருபுறம் அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர், கழிவறை, ஆய்வக வசதிகள், அனைத்து பாடத் திற்கும் ஆசிரியர் இல்லாமை என அரசு பள்ளிகள் திண்டாடி வருகிறது. அப்படிப்பட்ட சூழலை மேம்படுத்துவதற்கு பதிலாக தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் புகுத்தி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உரு வாக்க முயற்சிக்கின்றது. கியூபா, பின்லாந்து போன்ற கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளி லும் 16 வயது வரை தேர்வு இல்லாத வகுப்பறைச் சூழல் நிலவும் பொழுது விழாவிற்கு சென்று வந்த அடுத்த நாளே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுத் தேர்வு என்று அறிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை எளிய மாண வர்களுக்கு 25 சத இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் முழுமையாக அமல்படுத்த மறுத்து வருகின்றன. சேர்க்கப்பட்ட மாணவர்களிடமும் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு நிர்ண யித்த கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது.
இச்சூழலில்தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை இன்றைய தினம் வரை தமிழக அரசு தெளிவாக தெரிவிக்க வில்லை. ஆனால், அதில் இருக்கக்கூடிய சாராம் சங்களை தினம் தோறும் நடைமுறைப்படுத்தக் கூடிய பணியினை தமிழக அரசு மேற்கொண்டு வருவதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக 3, 5, 8 , 9 , 10 , 11 , 12 ஆகிய வகுப்புகளுக்கு தேசிய பொதுத்தேர்வு என்று புதிய கல்வி கொள்கை சொல்வதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. 2 லட்சத்து, 60 , ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூடுவது என்கிற மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு நடை முறைப்படுத்தி வருகிறது. மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அரசு ஊழி யர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் பயில்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
எனவே, மாணவர்களுக்கு எதிராக உள்ள மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கை 2019ஐ உடனடியாக கைவிட வேண்டும், அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர் கழிவறை வகுப்ப றை ஆய்வக வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், மாணவிகளுக்கான நேப்கின், நேப்கின் எரியூட்டும் கருவி போன்றவற்றை உறு திப்படுத்த வேண்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும், 2017 - 18 , 2018 - 19 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள தமிழக அரசின் இலவச மடிக்கணினி அனைத்து மாணவர்களுக்கும் நிபந்தனையின்றி உடனடி யாக வழங்கவேண்டும், கல்வி நிலையங்களில் நடைபெறும் தற்கொலை மரணங்களை தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்து கிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவர் கோரிக்கை மாநாடு வருகிற 2019 நவம்பர் 30 சனிக்கிழமை அன்று நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தமிழகம் முழுவதும் இருந்து பிரதிநிதிகளாக கலந்து கொள்வார்கள் என அவர் கூறினார். பேட்டியின்போது மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பதில் சிங், மாவட்டச் செயலாளர் பிரிஸ்கில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.