மாற்றுத்திறனாளிகள் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
தருமபுரி, பிப். 8- பதவி உயர்வில் 5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. அரசு பொது நூலகத்துறை மாற்றுத் திறனாளிகள் ஊழியர் சங்க மாநில சிறப்பு மாநாடு தருமபுரி முத்து இல்லத் தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாநில தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பி.சீதாலட்சுமி கொடியெற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில இணைச் செயலாளர் ஜி.தும்பாராவ் வரவேற்றார். மாநில இணைசெயலா ளர் எஸ்.முருகன், மாநில செயலாளர் பி. சரவணன், மாநிலபொருளாளர் என். நாகராஜன் ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். அரசு பொது நூலகத்துறை பணியா ளர் கழக மாவட்ட தலைவர் எஸ்.முனி ரத்தினம் அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய மாநில துணைத் தலைவர் ஜி.மாதேஷ்வரன், பொது நூலகத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் பி.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில் உச்சநீதிமன்ற ஆணைப்படி நூலகத்துறையில் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 5 சதவிகித இடஒதுக் கீடு வழங்க வேண்டும். நூலகத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயணப்படி ரூ.2,500 வழங்கப்படுகிறது. சில மாவட்டங்களில் ரூ.2,000 வழங்கப் படுகிறது. எனவே, அரசு ஒதுக்கீடு செய்யும் பணத்தை முழுமையாக வழங்க வேண்டும். மாவட்ட பணிமாறு தல்களை உடனே அமல்படுத்த வேண் டும். பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கோவையில் மாடி யில் முதல் தளத்தில் இருக்கும் நூல் வழங்கும் பிரிவை தரைதளத்துக்கு கொண்டு வரவேண்டும். நூலகங்க ளில் சாய்தளங்கள் மின்தூக்கி அமைக்க வேண்டும். நூலகத்திற்கு நூல் வழங்கும் வேலையை நூலக நிர்வாகமே செய்ய வேண்டும். நூலகங்களில் மாற்றுத்திறனாளி களுக்கென்று கழிப்பறை அமைக்க உரிய நிதி ஒதுக்க வேண்டும். சிதல மைடைந்த நூலகங்களை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில் புதிய மாநில தலை வராக ஆர்.ஸ்டாலின் (தஞ்சாவூர்), செயலாளராக பி.சரவணன் (தரும புரி), பொருளாளராக என்.நாகராஜன் (தின்டுக்கல்), துணைத்தலைவர்க ளாக ஜெயக்குமார் ஜோசப், பச்ச முத்து, சண்முகநாதன், சிவக்குமார், இணைச் செயலாளராக முருகன், தும்பாராவ், கிருஷ்ணஜாலம், ராஜ துரை மற்றும் 7 பேர் மாநிலக்குழு உறுப் பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.