tamilnadu

img

ரயில்வேயில் மறுக்கப்படும் பிராந்திய முன்னுரிமைகள்

மன்னார்குடி, மே 13-9.5.2019 அன்று கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரசில் எஸ்.5 கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு வயதான தம்பதி யினர் குடிநீருக்காக தவித்தனர். தென்காசிக்கும் சிவகாசிக்கும் இடையில் ஒரு ரயில் நிலையத்தில் இறங் கிய 70 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் தனது பெட்டிக்கு நேரே அறைவாசலில் நின்றிருந்த பணி ஸ்டேஷன் மாஸ்டரிடம் வண்டி மூன்று நிமிடம் நிற்குமா என்று தமிழில் கேட்டார். ஸ்டேஷன் மாஸ்டரும் தலையாட்டியுள்ளார்.முதியவர் ஓட்டமும் நடையுமாக பிளாட்பாரம் கடையில் ஒரு தண்ணீர்பாட்டில் வாங்கிக் கொண்டு திரும் பிய போது ரயில் புறப்பட்டிருந்தது. தவிப்பில் ஆடிப்போன அந்த முதிய வரை பிளாட்பாரத்தில் நின்றிருந்த இரண்டு பேர், அவரை அப்படியே தூக்கி எஸ்.2 கம்பார்ட்மெண்ட் வாயிலில் திணிக்க வாசலில் நின்றபயணி ஒருவரும் அவரை உள்ளே இழுத்துக் கொண்டார். இதற் கிடையில் கணவரை காணாத அந்த மூதாட்டியின் அழுகையும் அந்த ரயில் பெட்டியின் சக பயணிகளின் பதற்றமும் கவலையும் எந்த அளவுஇருந்திருக்கும் என்பதை விவ ரிக்கத் தேவையில்லை.தண்ணீர் பாட்டிலை பற்றியபடி ரயில் கம்பார்ட்மெண்ட் வாசலில் பதற்றத்தில் உட்கார்ந்து விட்ட அவரை இரண்டு இளைஞர்கள் எஸ்.5கோச்சில் அவர் மனைவியிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர். அந்த ரயில் நிலைய அதிகாரி பீகாரைச்சேர்ந்தவர் என்பதையும் தமிழில் முதியவரின் கேள்வியை புரிந்து கொள்ளாததால் வந்த வினை என்றும் இதற்கான காரணத்தை அந்த இளைஞர்களே தெரிவித்தனர்.கடந்த மார்ச் மாதம் ஒரு நாள் திருவாரூர் மாவட்டம் நீடாமங் கலம் சந்திப்பு நிலையத்தை அதி வேகமாக கடந்து சென்றது ஒரு ரயில். பெங்களூர் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திருவாரூர் - காரைக்குடி பிரிவு புதிய அகலரயில் பாதையை சோதனை செய்வதற்காக செல்லும் ரயில் அது. அடுத்த ஒரு நிமிடத்தில் நான்கைந்து முஸ்லிம் பெண்கள் ஓட்டமும் நடையுமாக வந்து அது என்ன ரயில் என்று கவலையோடு கேட்ட போது ஜார்க் கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரயில் நிலைய அதிகாரியின் மொழி குழப்பத்தில் அந்த பெண்களின் அதிருப்தி யை அதிகப்படுத்தியது. அந்த ஸ்டேஷன் மஸ்டரின் இந்தியும், அரைகுறை ஆங்கிலமும் கலந்த பதிலால் அந்த பெண்கள் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து பெருங் கூச்சல் எழுப்பினர்.

இந்த இரண்டு உதாரணங்கள் ஒருசாம்பிள் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் தென்னக ரயில்வேயில் பணிபுரியும் பெரும்பாலான வெளிமாநில ரயில் நிலைய அதிகாரிகளுக்கு ஆங்கிலமும் சரிவர தெரியாதது தான், மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. தென்னக ரயில்வேயின் ஆறுகோட்டங்களின் எல்லா ரயில்வே நிலையங்களிலும் ஏதோ ஒரு வகை யில் அன்றாடம் மக்கள் சந்திக்கும் இதுபோன்ற சோதனைகளும் வேதனைகளும் சொல்லி மாளாது. மக்கள் சந்திக்கும் சிரமங்கள் ஒருபுறமிருக்க சமீபத்தில் 9.5.2019அன்று திருமங்கலம் கள்ளிக் குடிக்கு இடையில் இரண்டு ரயில்கள்ஒரு தடத்தில் நேரெதிர் செலுத்தப் பட்டதும் கடைசி கட்டத்தில் இத்தவறுகண்டறியப்பட்டு பெரும் விபத்துதடுக்கப்பட்டது. இதன் பின்னணி பஞ்சாபி ரயில் நிலைய அதிகாரியின் செய்தி தவறாக புரிந்து கொள்ளப் பட்டதே என தகவல்கள் கூறின.தென்னக ரயில்வேயில் பணி புரியும் கேட் கீப்பர்கள் உள்ளிட்ட நான்காம் நிலை ஊழியர்களில் கணிசமான எண்ணிக்கையினர் வெளி மாநிலத்தவர் - குறிப்பாக திருச்சி ரயில்வே கோட்டத்தில் 2145 கேட் கீப்பர்கள் பணியில் உள்ளதாகவும் இவர்களில் பெரும் பகுதியினர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் ஒரு தகவல் கூறுகிறது. இவர்கள் ரயில் நிலைய அதிகாரிகளோடு மொழி சார்ந்த பணிப் பிரச்சனைகளோடு மக்களை புரிந்து கொள்வதிலும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக கேட் கீப்பர்களுக்கும், ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பு பரி மாற்றம் திருப்திகரமாக இல்லை என்றேதகவல்கள் கூறுகின்றன.

அதேசமயத்தில் தல மக்களும், பயணிகளும் இவர்களிடம் சிரமங் களை சந்தித்து வருகின்றனர். திருச்சிகோட்டத்தில் மட்டும் ஏப்ரல் 2017 லிருந்து 2018 டிசம்பர் முடிய 13 கேட் கீப்பர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டும் எட்டு கேட் கீப்பர்களுக்கு விளக்கங் கோரும் குறிப்பாணைகள் வழங்கப்பட்டும் அவர்களின் எதிர்காலம்கேள்விக்குறியாக மாறியிருப்பதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சாதாரண ஏழை, எளிய, நடுத்தர இந்திய மக்களின் பொதுப் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்து நிறைவேற்றி வரும்இந்திய ரயில்வேயின் சேவை கோட்பாட்டை மோடியின் ரயில்வேநிர்வாகம் சரி வர உருவாக்கி நிறைவேற்றாததே இந்த அவலங்களின் ஆணி வேராகும். இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களின் ஊழியர், அதிகாரிகள் பணி நிய மனங்களில் பிராந்திய முன்னுரிமைகள் அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளதுதான் இதற்கான முழு முதல் காரணமாகும். அந்தந்த மண்டலங்களில் ரயில்வே ஊழியர்களின் நியமனங் கள் அந்தந்த மண்டல மக்களில் இருந்தே செய்யப்பட வேண்டும். தென்னக ரயில்வேயில் வடமாநில ஊழியர்களையே பெருமளவு நிய மிக்கும் முறை ரத்து செய்யப்பட வேண்டும். பிஜேபியின் ஆட்சி முடி வுக்கு வரும் போது இந்த பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் படும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

- நீடா சுப்பையா