tamilnadu

img

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 20- அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை  வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் கோவையில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.  அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.  குமரி கடல், மாலத்தீவு, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

;