tamilnadu

img

விழுப்புரம் கொரோனா வார்டில் முதியவர் பலி

விழுப்புரம் ஏப்.16- விழுப்புரம் அருகே பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த அன்வர் அலி(60). நெஞ்சு வலியால் பாதிக்  கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் கடந்த  புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து  மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில்

கொரோனா வார்டில்  அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந் தார். அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல்  இருந்ததால் கொரோனா நோய்க்கான வழிகாட்டு தல் படி, அவர் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். உயிரிழந்த முதியவரின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. அதன் முடிவு வந்த பிறகுதான் அவர் எதனால் இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என்று சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.