சென்னை,மார்ச் 17- கொரோனா அச்சுறுத்தல் காரண மாக சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைக்க அவசியமில்லை என முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி னார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,“கொரோனா பீதி பரவி வரும் நிலையில் அரசு எடுத்தி ருக்கும் தடுப்பு நடவடிக்கைள் விழிப்பு ணர்வை வரவேற்கிறேன். திமுக தரப்பில் ஏற்கனவே அறிவித்திருந்த கூட்டங்கள் அனைத்தும் வருகிற 31 ஆம் தேதி வரை தள்ளி வைத்திருக்கி றோம்” என்றார்.
தமிழ்நாட்டில் 2,221 பேர் கண்கா ணிப்பில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சைக்கு தனி பிரிவு அமைக்க வேண்டும். ஏழை- எளிய மக்கள் பயன் பெறும் வகையில் குறைந்த விலையில் ஆய்வு நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனா பாதித்தவர்களை தனிப்ப டுத்தும் மருத்துவ முகாம்களை மக்கள் அதிகம் நடமாட்ட மில்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி யின் சட்டமன்றகுழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி, எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை ஒத்திவைக் கும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு விளக்கம் அளித்த முதல மைச்சர், “கொரோனா காரணமாக சட்டப் பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. சட்டப் பேரவையில் போதிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. நான் உள்பட உறுப்பி னர்கள் அனைவரும் பரிசோதனைக்கு பிறகே பேரவைக்குள் அனுமதிக்கப்படு கிறார்கள்” என்றார்.