சென்னை, செப்.24- வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கும், சிறப்பு கருவிகள் வாங்குவதற்கு ரூ.38.52 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மழைக் காலங்களில் கீழே விழும் மரங்களை அகற்ற தேவையான ஆட்களையும், மரம் அறுக்கும் இயந்திரங்க ளையும், மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்களையும் தயாராக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் மழையின் காரணமாக தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் பிளீச்சிங் பவுடர், மற்ற பொருட்கள், மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்துவதற்காக கூடுதல் உபகர ணங்கள் மற்றும் சிறப்பு கருவிகள் வாங்குவ தற்காக 30 கோடியே 27 லட்சம் ரூபாயும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உபகரணங்களுக்காக 7 கோடியே 25 லட்சம் ரூபாயும், மீன்வளத் துறைக்கு உபகரணங்களுக்காக ஒரு கோடி ரூபாயும் என மொத்தம் 38 கோடியே 52 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தர விட்டார்.