மேட்டூர், ஆக.10- கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டி யது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், அந்த மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 84 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணை, 82 அடி நிரம்பி யது. கபினி அணைக்கு வினா டிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அது அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. பின்னர் ஒன்றே கால் லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள் ளது. அதன் உப அணையான தாரகாவிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம், காவிரி யில் பாய்கிறது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து நொடிக்கு 50,000 கன அடி நீர் திறக்கப்படு கிறது. இதன் காரணமாக காவிரி யில் மொத்தமாக 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. திறந்து விடப்பட்ட நீர் வினா டிக்கு ஒரு லட்சம் கன அடி என்ற வீதத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு விற்கு வந்து கொண்டிருக்கிறது.
பரிசலுக்கு தடை
ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வருவதால், அங்குள்ள அருவி களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிக ரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் வரு வாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து வரும் நீர் இதேஅளவில் தொட ரும் பட்சத்தில், மேட்டூர் அணை யின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.