சென்னை, ஆக. 18- கொரோனா தொற்று காரணமாக மார்ச் 22 முதல் இன்று வரை பல ஊரடங்குகளை அறிவித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எப்போது கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்ற ஏக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்களில் பல, ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் ஒரு பக்கம் நடத்திக் கொண்டிருக்க, மறுபுறம் அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி பெறுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ள னர்.
191 நாடுகளில் 150 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என யுனிசெப் கூறுகிறது. 10ல்9 குழந்தைகளுக்கு வகுப்பறை கற்றல் சாத்தியமற்று உள்ளது. இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி உள்ளனர். அரசும் இணையதள வழி கல்வியை கொடுக்க திட்டமிட்டு உள்ளது. இதனால் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் குழந்தைகள் தான் கல்வி பெற முடியும். கல்வி பெற மாணவர்கள்- ஆசிரியர்கள் தொடர்பு முக்கியம். அத்தகைய தொடர்பு ஆன்லைன் வகுப்புகளில் கிடைக்காது. ஆன்லைன் வகுப்புகள் அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கு இல்லை. மதிப்பெண் எடுப்பதற்கான தயாரிப்புகள் தான் நடைபெறுகிறது. 80 சதவீதம் மக்களுக்கு கணினி, ஆண்ட்ராய்ட் கைபேசி வசதிகள் இல்லை. கனடாவில்100க்கு80 பேர் உயர்கல்விக்கு செல்ல முடிகிறது. அங்குகூட ஆன்லைன் வகுப்புகள் இல்லை. அவர்கள் உயிர்ப்பு இல்லாத கல்வியை தவிர்க்கிறார்கள், இந்தியாவில் 100 க்கு 27 பேர்தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள்.
தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு ஆன்லைன் கல்வியை வழங்குவது குறித்து குறிப்பிடுகிறது. இதனால் சமூகத்தில் பின்தங்கியவர் களுக்கு கல்வி மறுக்கப்படும். மேலும் ஆன்லைன் கல்வி முறை உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எல்லோருக்கும் கல்வி ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி பொதுக்கல்வி தான் வேண்டும் என நாம் கோருகிறோம். அரசு மக்களையும் மாணவர்களையும் கைவிட்டுள்ளது. இதில் குழந்தைகள் கடைசியாக நிற்கிறார்கள். அதிலும் பெண் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அரசு கைவிட்டாலும் நாம் இருக்கிறோம் என்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவுத்திறனையும் திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் வழங்குவது என அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநிலக் குழு முடிவு செய்து ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தன்று நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கிட முடிவு செய்தது. அதன்படி கோவை-10,விருது நகர்-8, கடலூர்-7, தஞ்சை-5,மதுரை மாநகர்-5,திண்டுக் கல்-4,தருமபுரி-4,தென்சென்னை-3,மதுரைபுறநகர்-3,பெரம்பலூர்-4,காஞ்சிபுரம்-3, புதுக்கோட்டை-2, தூத்துக்குடி-3,வடசென்னை-1, சேலம்-3, தேனி-2,வேலூர்-1, நாகை-7 உட்பட மொத்தம் 75 மையங்களில் உற்சாகமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியர் களாக இருப்பவர்கள் படித்து முடித்த இளம் பட்டதாரி ஆண்கள், பெண்கள் இலவசமாக வகுப்பு எடுப்பதற்கு முன் வந்துள்ளனர் . தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பொதுப் பள்ளிக்கான மேடையும் இணைந்து இந்த பள்ளிகளை வழி நடத்துவதற்கு ஆலோசனைகளை வழங்கி உதவியுள்ள னர். தனிமனித இடைவெளியுடன் முக கவசத்துடன் சுகாதாரமான பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சுதந்திர தினக் கொடியை ஏற்றிவைத்து துவங்கியுள்ளனர். இவ்விபரங்களை சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.