tamilnadu

img

தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஊரடங்கு பாதிப்பு நிவாரண நடவடிக்கையில் அரசியல் கட்சிகள்- தன்னார்வ அமைப்பினரை பாரபட்சமின்றி பயன்படுத்துக!

சென்னை, ஏப்.12- ஊரடங்கு பாதிப்பு நிவாரண நட வடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளையும் தொண்டர்களாக பாரபட்சமின்றி பயன் படுத்த வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.  இதுகுறித்து தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமிக்கு கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் கடந்த 17 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வீடுகளில் இருக்கும் மக்க ளுக்குத் தேவையான பொருட்களை வீடு களுக்கே சென்று விநியோகிப்பதற்கும், நியாயவிலைக் கடைகள், காய்கறி மார்க் கெட் போன்ற இடங்களில் சமூகவிலகலை உத்தரவாதப்படுத்தவும், மக்களை ஒழுங்கு படுத்துவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தங் களை பதிவு செய்ய வேண்டுமென அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தொண்டு அமைப்பினர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஆனால் நான்கு மாவட் டங்களை தவிர, இதர மாவட்டங்களில் இவ் வாறு பதிவு செய்யப்பட்ட தொண்டர்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இல்லை. பலமுறை கேட்ட பிறகும் மாவட்ட நிர்வாகங்களில் இருந்து உரிய பதில்கள் கிடைக்கவில்லை. ஆனால், அதேசமயம் வேறு சில அரசியல் அமைப்புகள் மற்றும் மத அமைப்புகளுக்கு நூற்றுக்கணக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்ற னர். 

முன்னெப்போதுமில்லாத நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில் கூட அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அரசியல் காழ்ப்புணர்ச்சி யோடு தொண்டர்களைப் பயன்படுத்து வதில் பாரபட்சம் காட்டுவது வருத்தத்திற்கு உரியது. பிரதிபலன் பாராமல் அர்ப்பணிப்புணர்வு டன் மக்களுக்கு சேவை செய்ய முன்வரு பவர்களை பாரபட்சமின்றி பயன்படுத்து வதே அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

;