tamilnadu

img

விவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி மோசடி செய்த

தஞ்சை எஸ்.பி.யிடம் புகார் மனு

தஞ்சாவூர், மே 20- திருஆரூரான், அம்பிகா சர்க்கரை ஆலையில் விவ சாயிகளின் பெயரில் ரூ.360 கோடி வங்கி கடன் வாங்கி ஏமாற்றிய நிலையில், விவசாயிகளுக்கு தற்போது வங்கியிலிருந்து நோட்டீஸ் வருவதால், அதிருப்தியடைந்த விவசாயி கள் ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திங்கள் கிழமை தஞ்சாவூர் மாவட்டகாவல்துறை கண்காணிப்பா ளரிடம் மனு அளித்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையும், திருவிடைமருதூர் தாலுகா கோட்டூரில் உள்ள அம்பிகா சர்க்கரை ஆலையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த இரு சர்க்கரை ஆலையிலும் கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் அரவை செய்த கரும்புக்கான பாக்கித்தொகை 82 கோடி ரூபாயை இதுவரை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இதற்கிடையில் இவ்விருஆலை நிர்வாகமும், விவசாயிகள் கரும்பை பதிவுசெய்யும் போது, அவர்களி டம் பல்வேறு படிவங்களில் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு அதனை வைத்து கும்பகோணத்தில் உள்ள பல வங்கிகளில், விவ சாயிகளின் பெயரில் சுமார்360 கோடி ரூபாய் வரை கடனை ஆலை நிர்வாகங் கள் பெற்று மோசடி செய்துள்ளன. 

அதே நேரத்தில், கடலூர் மாவட்டம் சித்தூரில் இதே சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலையிலும் விவசாயிகள் பெயரில் வங்கியில் 80 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். அதில் விவசாயி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 8 ஆம் தேதி கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சர்க்கரை ஆலையின் உரிமையாளர் தியாகராஜனை கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில் தஞ்சை விவசாயிகளுக்கு வங்கி களிலிருந்து கடந்த சில மாதங்களாக அசலும், வட்டியும் செலுத்த வேண்டும் எனஒவ்வொரு விவசாயி பெய ருக்கும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விவசாயிகள் ஆட்சியரிடம் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதைத் தொடர்ந்து தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலபொதுச்செயலாளர் ரவீந் திரன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கபிஸ் தலம் கே.ராமகிருஷ்ணன், கம்பர்நத்தம் ஆர்.ராஜேந் திரன், டி.ரவி, குளுந்தி யாதவ் உள்ளிட்ட 25-க்கும்மேற்பட்டவர்கள், மாவட்டகாவல்துறை கண்காணிப்பா ளர் எஸ்.எஸ்.மகேஸ்வர னிடம் புகார் மனு ஒன்றை திங்கள்கிழமை அளித்தனர். 

இதில், “கும்பகோணம் கார்ப்பரேஷன் வங்கியில், 212 விவசாயிகள் பெயரில் 45 கோடி ரூபாய் வரை ஆலை நிர்வாகம் கடன் பெற்றுள்ளது. இதை போல, பல வங்கியில் 360 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. தற்போது விவசாயிகளுக்கு வங்கிகளிலிருந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார்கள். வங்கி ஊழியர்கள் ஆலைநிர்வாகத்திற்கு உடந்தை யாக இருந்துள்ளனர் என்பதுதெரியவந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழி யர்கள், ஆலை நிர்வாக இயக்குநர் மற்றும் ஆலை ஊழியர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என மனு வில் கூறப்பட்டிருந்தது. அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.வி.கண் ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், கரும்பு விவசாயிகள் சங்க மாநில இணைச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் ஜி.ஆர்.ரவிச் சந்திரன், ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.எம்.காதர் உசேன், செயலாளர் எஸ்.தம்புசாமி, சிபிஎம்மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் என்.சுரேஷ்குமார், எஸ்.கோவிந்தராஜ், எம்.பழனி அய்யா, முரளிதரன், பால் உற்பத்தியாளர் சங்கமாவட்டத் தலைவர் துரை ராஜ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர். 


நிலம் இல்லா தொழிலாளி பெயரிலும் மோசடி 

கம்பர்நத்தம் கீழத்தோப்பு விவசாயி ஆர்.ராஜேந்திரன் பெயரில் ரூ. 23 லட்சம், கம்பர் நத்தம் பகுதி விவசாயி டி.ரவி பெயரில் ரூ.18 லட்சம், விவசாயிகள் மூட்டுக்காடு குளுந்தி யாதவ் மற்றும் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் பெயரில் மோசடியாக கையெழுத்து பெற்று கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கரும்பு ஆலை நிர்வாகம், நிலமே இல்லாத, கரும்பு வெட்டும் தொழிலாளியான சாலியாக்கோட்டை அருந்தவபுரம் ஏ.கோவிந்தராஜூ என்பவர் பெயரில் கார்ப்பரேஷன் வங்கியில் ரூ.17 லட்சம், பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் கடன் பெற்று ஏமாற்றி உள்ளது குறித்தும் புகார் மனு அளிக்கப்பட்டது.