tamilnadu

img

சமையல் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

அறந்தாங்கி ,மே 1-     புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 144-தடை  உத்தரவால் சமையல் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப ட்டுள்ளது.இவர்கள் அரசிடம் நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 அறந்தாங்கி அருகே திருநாளூர், பாண்டிக்குடி, வீரமங்களம் உட்பட அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் வசித்து வருகிறார்கள் . ஊரடங்கு உத்தரவால் தங்களுக்கு வேலை இல்லாமல் இருப்பதாகவும் சமையல் வேலை மட்டுமே தெரிந்திருப்பதால் மாற்று வேலைக்கு யாரும் அழைப்பதில்லை என்றும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாக இருப்பதாக சமையல் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

 மேலும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்துள்ளது. ஊருக்கே சமையல் செய்த எங்களுக்கு தற்போது எங்களுடைய  உணவே  கேள்விக்குறியாக உள்ளதாக வேதனையுடன் கூறினர். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி சமையல் கலைஞர்களின் வாழ்வாதரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.